Tuesday, 22 May 2012

பணி மூப்புத்தொகை (Gratuity) தொடர்பான ஆலோசனை

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடங்கள் மற்றும் 9 மாதம் (நீண்ட கால விடுப்பு இல்லாமல்) பணிபுரிந்தேன். தற்சமயம் நான் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டேன். எனக்கு gratuity கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? (சரவணன், திருச்சி)


நிச்சயமாக. உங்கள் கேள்விக்கான பதில் சுரேந்திர குமார் வர்மா (எதிர்) தொழிற்சங்க தீர்ப்பாயம் [(1980) (4) S.C.C. 433)] என்ற வழக்கில் தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் “ஒரு தொழிலாளி தன்னுடைய பணிக்காலத்தில் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி இருந்தால் அது ஒரு முழு வருடமாக கணக்கெடுத்துக் கொள்ளப்படும், அவர் ஒரு முழு வருடம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட தீர்ப்பு தொழிற்தகராறு சம்பந்தமான வழக்கு தொடர்பானது என்றாலும், இது பணி மூப்புத்தொகை சட்டம் (Payment of Gratuity Act) தொடர்பான வழக்குகளுக்கும் பொருந்தும். நீங்கள் பணிமூப்பு தொகை (Gratuity) பெற தகுதியானவர்தான்.

Seja o primeiro a comentar

Post a Comment

சட்டம் எனப்படுவது யாதெனின்

”கடமைகளை” உணர்த்திக் கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் வாழ்வை நெறிமுறைப் படுத்துவதற்குப் பிறந்ததுதான் ”சட்டம்”

எது நீதி?

அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின் மறவாது இது கேள்; மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும், உடையும், உறையுளும், அல்லது கண்டது இல்

About Me

My Photo
Trademark Registration, Copyright Registration, Lawyers in Chennai
இந்த வலைதளம் இந்திய சட்டம் மற்றும் நீதி துறை தொடர்பான உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், சரியான வழிகாட்டுதலை உங்களுக்கு அளிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி. சட்டம் குறித்த உங்கள் சந்தேகங்களை advsuresh09@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
View my complete profile

Free Legal Advice © Layout By Hugo Meira.

TOPO